|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

19 March, 2013

விளையாட்டில் இப்படி ஒரு விளையாட்டு!

 
சர்வதேச டெஸ்ட் தரவரிசையில், இரண்டாவது இடத்தை பிடிக்க, இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.டெஸ்ட் தரவரிசையில் மார்ச் 30 தேதியில் "டாப்-4' இடங்களில் இருக்கும் அணிகளுக்கு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் கோப்பை மற்றும் பரிசுத் தொகை வழங்கப்படும். இந்த ஆண்டு 128 புள்ளிகளுடன் தென் ஆப்ரிக்கா (ரூ. 2.5 கோடி) அணி முதலிடத்தை உறுதி செய்துவிட்டது. அடுத்த இடத்தை பிடித்து ரூ. 1.9 கோடியை தட்டிச் செல்ல, இங்கிலாந்து (114), ஆஸ்திரேலியா (112), இந்தியா (111) இடையே மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. இதில், இந்திய அணி 2வது இடம் பிடிக்க, டில்லி டெஸ்டில் (மார்ச் 22-26) ஆஸ்திரேலியாவை வீழ்த்த வேண்டும். அதேநேரம், மூன்றாவது டெஸ்டில் (மார்ச் 22-26) இங்கிலாந்து அணி நியூசிலாந்திடம் தோல்வி அடைய வேண்டும். இதன்மூலம் இந்தியா, இங்கிலாந்து அணிகள் தலா 112 புள்ளிகள் பெறும். தசம புள்ளிகள் வித்தியாசத்தில் இந்திய அணி 2வது இடத்தை பிடிக்கும்.

* இங்கிலாந்து அணி, 2வது இடத்தை தக்கவைத்துக் கொள்ள நியூசிலாந்துக்கு எதிராக குறைந்த பட்சம் "டிரா' செய்தாலே போதுமானது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி வெற்றி பெற்றால் கூட எவ்வித பாதிப்பும் வராது.

* ஆஸ்திரேலிய அணி 2வது இடத்துக்கு முன்னேற, டில்லி டெஸ்டில் இந்தியாவை கட்டாயம் வீழ்த்த வேண்டும். அதேவேளையில் இங்கிலாந்து அணி, நியூசிலாந்திடம் தோற்க வேண்டும். தரவரிசைப் பட்டியலில் மூன்று, நான்காவது இடம் பெறும் அணிகளுக்கு ரூ. 1.35 கோடி, ரூ. 81 லட்சம் கிடைக்கும்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...