|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

14 March, 2013

இன்னும் நாம் இந்த்தியர்தான?


கச்சத்தீவு அருகே மீன்பிடித்து்க கொண்டிருந்த 60 பாம்பன் மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் பிடித்துச் சென்று விட்டனர். இதனால் பாம்பன், ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் பெரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர். இன்று காலை இந்த அக்கிரமச் செயல் நடந்துள்ளது. நேற்றுதான் 19 தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் சிறை பிடித்துச் சென்றனர். இந்த நிலையில் இன்று 60 பேரை பிடித்துப் போயுள்ள செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று பிடித்துச் செல்லப்பட்டுள் 60 பேரையும் நெடுந்தீவு காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்று இலங்கைப் படையினர் ஒப்படைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்களின் 11 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பாம்பன் மீவர் சங்கத் தலைவர் அருளானந்தம் தெரிவித்துள்ளார். இந்த மீனவர்கள் அனைவரும் தங்கச்சி மடம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென வந்த இலங்கைக் கடற்படையினர் அனைவரையும் சுற்றி வளைத்து சிறை பிடித்தனர். மீனவர்களை சுற்றி வளைத்தபோது சிங்களப் படையினர் தமிழக மீனவர்களை கயிறுகளாலும், இரும்புக் கம்பிகளாலும் தாக்கியதாக கூறப்படுகிறது.


No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...