|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

25 January, 2014

இயற்கை அன்னை ஒருபோதும் மன்னிக்கமாட்டாள்!

ஒரு நாள் என் வீட்டிற்குள் திடீரென சிலர் அத்துமீறி நுழைந்தனர், என்னையும் என் குடும்பத்தையும் காப்பாற்றிக்கொள்ள அவர்களை விட்டு விலகி வெகு தூரம் வேறு இடம் நோக்கி நகர்ந்தேன், அங்கும் மனிதர்கள் நுழைந்தார்கள், என்ன செய்வதென்று தெரியவில்லை, இங்கும் அங்கும் ஓடினேன், ஓடிய இடமெங்கும் மனிதத் தலைகளாகவே இருந்தது முடிந்தவரை போராடி இனிமுடியாது என்பதால், அவர்களில் சிலரை கொன்றேன், கொல்லும் போது நேருக்கு நேர் நின்று தான் கொன்றேன், ஆனால் எதிரிகள் கோழைகள் போலும், நான் ஏமார்ந்த நேரம் பார்த்து மறைந்து நின்று எதைக்கொண்டோ அடித்து காயப்படுத்தி என்னை கொன்றுவிட்டார்கள். எனக்கு இந்த பூமி மிகவும் பிடிக்கும். இனி மீண்டும் இறைவன் படைத்த இந்த அழகிய இடத்திற்கு திரும்புவேனா தெரியாது. மனிதன் துணை இல்லாமல் எங்களால் வாழ முடியும், ஆனால் எங்கள் துணை இல்லாமல் அவனால் வாழமுடியாது என்பதை அவன் எப்போது உணரப்போகிறான் என்பது தெரியவில்லை. ஆனல் காலம் வெகுவிரைவில் அவனுக்கு அதை உணர்த்தும், அவன் அழிவு நெருங்கிக்கொண்டிகின்றது. அத்துமீறி எங்கள் வீட்டிற்குள் குடியேறி வாழும் அவனை இயற்கை அன்னை ஒருபோதும் மன்னிக்கமாட்டாள் ,இவர்களின் அழிவு இயற்கையின் கையில் தான் என்பது உறுதி, வருகிறேன், இல்லை மன்னிக்கவும். செல்கிறேன்!.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...