|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

25 March, 2011

மியான்மரில் நிலநடுக்கம்: 75 பேர் வரை பலி

மியான்மரில் நேற்றிரவு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 75 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது.நிலநடுக்கத்துக்கு 75 பேர் பலியாகியுள்ளதாகவும், 110 பேர் காயமடைந்துள்ளதாகவும் மியான்மர் நாட்டின் மீட்பு பணிகள் துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.நிலநடுக்கம் காரணமாக பல இடங்களில் சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதால், கிராமப் பகுதிகளில் மீட்பு நடவடிக்கை மேற்கொள்வதில் சற்று சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், ராணுவம், போலீஸார் மற்றும் உள்ளூர் அரசு நிர்வாக பணியாளர்கள் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...