|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

18 March, 2011

உங்களுக்கு கிரியேட்டிவ் திறமை உள்ளதா?

பாடத்தில் உள்ளவற்றைப் படித்து வாங்கும் மதிப்பெண்களை விட, சுயமாக சிந்தித்து உருவாக்கிய ஓவியத்தாலோ, கலைப் பொருளாலோ அதிக மகிழ்ச்சி அடைந்திருக்கிறீர்களா?
அப்படியானால் இது உங்களுக்கானதுதான். இரண்டாம் உலகப் போரில் நடந்த யுத்தத்தைப் பற்றி எழுதிபட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்று, ஒரு அலுவலகத்தில் போய் வேலை செய்ய உங்களுக்கு விருப்பம் இல்லையா?

பென்சிலால் கட்டமும், சதுரமும் வரைந்து புதிய டிசைன்களை உருவாக்குவதிலும், கலைப் பொருட்களை வடிவமைப்பதிலும் உங்களுக்கு ஆர்வம் உள்ளதா? அதையே முழு நேர வேலையாக செய்யும் எண்ணம் இருந்தால் நீங்கள் சேர வேண்டியது டிசைனிங் பாடப்பிரிவுகளில்.

இதில் என்ன எதிர்காலம் இருக்கிறது என்ற காலம் போய், இதில் நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று சொல்லும் அளவிற்கு இந்தியாவில் தற்போது டிசைனிங் கோர்ஸ் படித்தவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் உள்ளன.

பெங்களூருவில் உள்ள டிசைன் அண்ட் டெக்னாலஜி படிப்புகளை அளிக்கும் சிருஷ்டி ஸ்கூல் ஆப் ஆர்ட்டின் ப்ரொபஷனல் டிப்ளமோ ப்ரோக்ராம்ஸ் பிரிவின் டீன் அம்பட் வர்கீஸிடம் இது பற்றி கேட்டதற்கு, இந்தியாவில் டிசைனிங் துறையில் குறைந்தது 10,000 முதல் 20,000 வடிவமைப்பாளர்கள் தேவைப்படுகிறார்கள். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் வெறும் 1,000 பேர்தான் இதுபோன்ற படிப்புகளில் சேருகின்றனர். இந்த துறையில் நல்ல எதிர்காலம் இருந்தும் இது பற்றி மாணவர்களிடம் விழிப்புணர்வு இல்லாததே முக்கியக் காரணம் என்கிறார்.

அதுமட்டுமல்லாமல், நாடு முழுவதும் சின்ன சின்ன பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் ஏராளமாக உள்ளன. ஆனால் வடிவமைப்பாளர் பயிற்சி அளிப்பதற்கான கல்வி நிலையங்கள் என்றால் அது வெறும் 8 தான் உள்ளன. தற்போது பல கல்வி நிலையங்களில் விஷ¤வல் கம்யூனிகேஷன் படிப்பு உள்ளது சற்று ஆறுதல் அளிக்கிறது என்றார்.

விஸ்காம் என்றால் என்ன?
விஷ¤வல் கம்யூனிகேஷன் என்பதைத்தான் விஸ்காம் என்று சுருக்கமாக அழைக்கிறார்கள். விஷ¤வல் கம்யூனிகேஷன் பாடப்பிரிவில் மீடியா தொடர்பான அனைத்து பாடங்களும் கற்பிக்கப்படுகின்றன. அதாவது எழுதுதல், தொகுப்பு, புகைப்படம் எடுத்தல், படம் எடுப்பது, அனிமேஷன், டிசைனிங் மற்றும் ஏனைய விஷயங்களும் கற்றுத்தரப்படுகிறது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...