|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

02 August, 2011

மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மனைவி காந்தி அழகிரி மீது நில அபகரிப்பு வழக்கு !

 மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மனைவி காந்தி அழகிரி மீது நில அபகரிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  இன்று இரவு 8 மணிக்கு அவர் கைது செய்யப்படலாம் என்று காவல்துறை வட்டாரம் தெரிவிக்கிறது.

மதுரையில் உத்தகுடி என்கிற இடத்தில் உள்ள  நாகநாதர் கோயிலுக்கு சொந்தமான 17 ஏக்கர் நிலத்தை லாட்டரி அதிபர் மார்ட்டின் மூலம்,  காந்தி அழகிரி  தன் பெயருக்கு பதிவு செய்துகொண்டார் என்றும்,இந்த இடத்தை சுப்பிரமணியன் என்பவருக்கு தற்போது காந்திஅழகிரி பவர் கொடுத்துள்ளார் என்றும்,  இந்த இடம் 1500 வருடங்களூகு முன்பு நாகநாதர் ஆலயத்திற்கு சொந்தமான இடம் என்றும்,  அந்த கோயிலின் டிரஸ்டி ஒருவர் மதுரை எஸ்.பியிடம் புகார் கொடுத்துள்ளார்.  
நேற்று அழகிரி டெல்லி சென்றிருக்கும் நிலையில் இன்று காந்தி அழகிரி மீது வழக்கு பாய்ந்துள்ளது. இதையடுத்து காந்திஅழகிரி மீது வழக்கு தொடரப்படுள்ளது. இன்று இரவு 8மணிக்கு காந்தி அழகிரி கைது செய்யப்படலாம் என்று காவல்துறை வட்டாம் கூறூவதால் மதுரையில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...