|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

02 August, 2011

நடிகர் சந்தானத்துக்கு எதிர்ப்பு!

வழக்குகளுக்காக அலையும் நடிகர் சந்தானத்திடம், வில்லன் நடிகர் ஒருவர் நான் வழக்கு தொடர வேண்டும் என்று கூறுவார். என்ன வழக்கு என்று சந்தானம் கேட்பார். பதிலுக்கு அவர் கொலை வழக்கு என்பார். யாரை கொலை செய்துவிட்டீர்கள் என்று சந்தானம் கேட்க, என் வழக்கில் வாதாடிய வக்கீலைத்தான் என்று அவர் கூறுவார். நடிகர் விக்ரம் - அனுஷ்கா நடிப்பில் வெளிவந்திருக்கும் திரைப்படம் தெய்வதிருமகள். இந்த படத்தில் நகைச்சுவை நடிகர் சந்தானம் வழக்கறிஞராக நடித்துள்ளார்.

அவரிடம் இருந்து தப்பிப்பதற்காக 'நான் லாயர் இல்லீங்க... டீக்கடை நாயர்' என்று கூறி எஸ்கேப் ஆவார். அப்போது வில்லன் நடிகர், கோர்ட் போட்டிருக்கியே என்பார். உடனே சந்தானம் அய்யயோ நான் குளிருக்காக கோர்ட் போட்டிருக்கிறேன் என்று சொல்லி டீ, காபி, டீ, காபி என்று டீக்கடைக்காரரைப்போல் வில்லன் நடிகரிடம் இருந்து தப்பித்து ஓடுவார். இதேபோல் சில காட்சிகளில் அவர் நடித்திருப்பார். 

இந்த காட்சிகள் வழக்கறிர்களை இழிவுப்படுத்துவதாக சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சம்மந்தப்பட்ட காட்சிகளை படத்தில் இருந்து நீக்குமாறு வழக்கறிஞர்கள் கோஷமிட்டனர்

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...