|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

14 October, 2011

சவுதியில் தமிழர்களுக்கு ஆபத்தில் உதவும் அமைப்பு!


சவுதி அரேபியாவில் வாழும் தமிழர்களுக்கு ஆபத்து காலங்களில் உதவ ஒரு அமைப்பு உருவாக்கப்படவிருக்கிறது.சவுதி அரேபியாவில் ஏராளமான தமிழர்கள் உள்ளனர். அவர்களுக்கு ஆபத்து காலங்களில் உதவ ஒரு அமைப்பு உருவாக்கப்படுகிறது. இதனை சவுதி வாழ் தமிழர்கள் இணைந்து உருவாக்குகின்றனர். சவுதி அதிலும் குறிப்பாக ஜெத்தா, மக்காவில் உள்ள தமிழர்களுக்கு விபத்து, மரணம், சட்ட பிரச்சனைகள் ஏற்பட்டாலோ, ஏதாவது அவசர உதவி தேவைப்பட்டாலோ இந்த அமைப்பின் உதவியை நாடலாம்.

இந்த அமைப்பிற்கு உதவ விரும்புபவர்கள் பல வழிகளில் தங்களது பங்களிப்பை செய்யலாம் என அறிவிக்கப்படுகிறது. நிதியுதவி செய்யலாம், சட்ட ஆலோசனை உள்ளிட்டவற்றை வழங்கலாம், நேரில் வந்து உதவலாம், இல்லை போக்குவரத்திற்கு உதவலாம். இது ஏற்கனவே உள்ள இந்திய அமைப்புகளில் இருந்து தனித்து இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...