|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

13 November, 2011

108 ஆம்புலன்ஸ் சேவைக்கு மருத்துவ உதவியாளர்கள் தேர்வு!


திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் 15ம் தேதி 108 ஆம்புலன்ஸ் சேவை க்கு மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. 108 இலவச ஆம்புல ன்ஸ் சேவையில் பணியா ற்ற மருத்துவ உதவியாளர் கள் தேவைப்படுகின்ற னர். இதற்காக வரும் 15ம் தேதி திண்டுக்கல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஆட்கள் தேர்வு செய்யப் பட உள்ளனர். இதற்கு பிஎஸ்சி பாட் டனி, சுவாலஜி, மைக்ரோபயா லஜி, பயோகெமிஸ் ட்ரி, கெமிஸ்ட்ரி, பிசிக்ஸ், லைப் சயின்ஸ், நர்சிங் அல்லது ஜிஎன்எம் (பிள ஸ்2வுக்கு பிறகு 3 ஆண்டு கள் நர்சிங் படித்திருக்க வேண்டும்) படித்தவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 

வயது 21 முதல் 30க் குள் இருக்க வேண்டும்.. ஆண், பெண் இருபா லா ரும் கலந்து கொள்ளலாம். அனுபவம் தேவையில்லை. எழுத்துத்தேர்வு, மரு த்துவ நேர்முகம், மனிதவளத் துறையின் நேர்முகம் என்று மூன்று பிரிவாக தேர்வுகள் நடை பெறும். ஊதியம் ரூ.7 ஆயிரத்து 250. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு 45 நாட்கள் முழு மையான வகுப்பறைப் பயிற்சி, மருத்துவமனை மற்றும் ஆம்புலன்ஸ் சார்ந்த நடைமுறை பயிற்சிகள் அளிக்கப்படும். பயிற்சி காலத்தில் மாத ஊக்கத்தொகையாக ரூ.3 ஆயிரம் வழங்கப்படும். தங்கும் வசதி மற்றும் தினசரி உணவிற்காக ரூ.100படியும் வழங்கப்படும்.  12 மணி நேர ஷிப்ட் முறையில் பணியாற்ற வேண்டும். தமிழகத்தின் தேவைப்படும் பகுதிகளுக்கு அனுப்பப்படுவர். தேர்வு செய்யப்பட்ட அன்றே பணி நியமன ஆணை வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு 9629038108 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...