|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

13 November, 2011

பதிவு மூப்பு அடிப்படையில் மட்டுமே ஆசிரியர் தேர்வு!


தொடக்கக் கல்வி இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு, வேலை வாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் மட்டுமே நடைபெறும் என, ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தொடக்கக் கல்வியில் உள்ள 1,743 காலியிடங்களுக்கான தேர்வு குறித்து, கடந்த 9ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இத்தேர்வு, வேலை வாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் மட்டுமே நடைபெறும். ஏற்கனவே, மொழி மற்றும் இனவாரியாக இறுதி மூப்பு தேதியுடன் பெறப்பட்ட, பணிநாடுனர்கள் பட்டியல், ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்தை தொடர்பு கொண்டு உரிய விண்ணப்பங்களை பெறலாம். மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர், விண்ணப்பம் வேண்டுவோரின் பெயர், வேலை வாய்ப்பகத்திலிருந்து பெறப்பட்ட பட்டியலில் உள்ளதை உறுதி செய்தபின், விண்ணப்பப் படிவம் வழங்கப்படும். இந்த இறுதி மூப்பு தேதி பட்டியல், அந்தந்த மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலகத்தில் ஒட்டப்பட்டிருக்கும். விண்ணப்பங்களை, நவம்பர் 15 முதல் எவ்வித கட்டணம் ஏதுமின்றி, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்தில் பெறலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்தில் 23ம் தேதி மாலை 5.45 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...