|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

13 November, 2011

அப்துல்கலாமுக்கு அவமரியாதை: அமெரிக்காவுக்கு எஸ்.எம்.கிருஷ்ணா எச்சரிக்கை!

நியூயார்க் விமான நிலையத்தில் அவரது கோட், ஷீவை கழற்றி வெடிகுண்டு சோதனை செய்யப்பட்டது.  இந்த சம்பவத்துக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்து இருந்தது. வெளியுறவு துறை மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா இந்த சம்பவம் தொடர்பாக, ’’அப்துல்கலாமிடம் சோதனை செய்யப்பட்டதை ஏற்றுக் கொள்ள இயலாது. இந்த சம்பவத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. இதுபோன்ற சம்பவங்கள் நிறுத்தப்படா விட்டால் அமெரிக்க உயர் அதிகாரிகளையும் நாங்கள் சோதனைக்கு உட்படுத்துவோம்’’என்று கூறியுள்ளார். அமெரிக்காவுக்கான இந்திய தூதர் நிருபாமாவை எஸ்.எம்.கிருஷ்ணா தொடர்பு கொண்டு இந்த பிரச்சினையை அமெரிக்க அரசின் உயர்மட்ட நிலைக்கு கொண்டு செல்லுமாறு வலியுறுத்தி உள்ளார்.

மன்னிப்பு கேட்டது அமெரிக்கா: அமெரிக்கா சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமிடம் பாதுகாப்பு என்ற பெயரில் அவரிடம் சோதனை நடத்திய அதிகாரிகள் கலாமின் கோட் மற்றும் ஷூவை பிடுங்கி சென்று எதுவுமில்லை என்று  மீண்டும் திரும்ப ஓப்படைத்தனர். இந்த சம்பவம் குறித்து மத்திய அரசு கடும் அதிருப்தியையும், கண்டனத்தையும் தெரிவித்துள்ளது. யார் இவர் என கேட்டு தொடர்ந்து அவரிடம் சோதனை நடத்த வேண்டும் என்றனர். இவர் இந்தியாவின் ஜனாதிபதி அப்துதுல்கலாம் இவரிடம் சோதனை நடத்த வேண்டிய அவசியமில்லை என உடன் இருந்த அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் அது செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருந்தது. 

கண்டுகொள்ளவில்லை. கலாமின் கோட் சூட் மற்றும் ஷூக்ககளை பிடுங்கி சென்றனர். சில நிமிடங்கள் கழித்து சோதனை முடிந்தது கொண்டு செல்லுங்கள் என கொடுத்தனர். இதற்கு கலாம் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. வெடிபொருட்கள் இருக்கிறதா என்று சோதனை நடத்தப்பட்டதாம். 
மத்திய அரசு இந்த விஷயத்தை மிக சீரியசாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். கலாமை பொறுத்த வரையில் இது போன் அமெரிக்க அதிகாரிகளின் கெடுபிடிக்கு 2 வது முறை ஆளாகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்க விமானம் ஒன்று டில்லியில் இருந்து கிளம்பும்போதும் இவரிடம் கெடுபிடிகள் காட்டப்பட்டது. இதற்கு எதிர்கட்சியினர் பார்லிமெண்ட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர்’’ என்று தெரிவிக்கின்றது. இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க குடியேற்ற துறை அலுவலகம் மன்னிப்பு கேட்டதாகவும், இது தொடர்பான மத்திய அரசு அதிகாžரிக்கு அமெரிக்கா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...