|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

03 November, 2011

போலி பட்டா தயாரித்து ரூ.100 கோடி நிலத்தை அபகரிக்க முயற்சி!


உத்தமபாளையத்தை சேர்ந்தவர் பாண்டிய ராஜன். இவரது மனைவி தங்கம் (வயது 45). இவருக்கு சொந்தமாக சென்னை போட்கிளப் பகுதியில் 23 கிரவுண்டு இடம் உள்ளது. இதன் மதிப்பு ரூ.100 கோடி ஆகும். இந்த இடத்தை ஓய்வு பெற்ற சார்பதிவாளர் அப்துல் காதர், நவநீதகிருஷ்ணன், ராமவெங்கட்நாராயணன் ஆகியோர் போலி பட்டா தயாரித்து அபகரிக்க முயன்றனர். 3 பேரும் போலியாக பட்டா தயாரித்து இந்த இடம் தங்களுக்கு சொந்தமானது என கோர்ட்டில் உத்தரவு பெற்றனர். இந்த உத்தரவின் நகல் கோர்ட்டில் இருந்து தங்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த நகலைப் பார்த்ததும் தங்கம் தனது நிலத்தை அபகரிக்க முயற்சி நடப்பதை அறிந்து கொண்டார். இது தொடர்பாக அவர் சென்னை மாவட்ட கலெக்டருக்கு மனு கொடுத்தார். அபிராமபுரம் போலீசிலும் புகார் செய்தார். போலி பட்டா வழக்கில் 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க போலீசுக்கு கலெக்டர் பரிந்துரை செய்தார். இதை ஏற்று போலீசார் போலி பட்டா தயாரித்து ரூ.100 கோடி நிலத்தை அபகரிக்க முயன்றதாக ஓய்வு பெற்ற சார்பதிவாளர் அப்துல்காதர், நவநீதகிருஷ்ணன் ஆகியோரை கைது செய்தனர். ராமவெங்கட் நாராயணனை தேடி வருகிறார்கள்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...