|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

21 November, 2011

பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளர்களை நாளை காலைக்குள் மீண்டும் பணிக்கு சேர்க்க வேண்டும் தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்!

பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளர்களை நாளை காலைக்குள் 
மீண்டும் பணிக்கு சேர்க்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பணியாளர்களை சேர்த்ததை, வரும் புதன்கிழமைக்குள் உறுதி செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள்நலப் பணியாளர்கள் தாக்கல் செய்த மனு குறித்து விசாரித்த நீதிபதி சுகுணா இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். வழக்கு தொடர்ந்தவர்களை மட்டும் பணியில் சேர்த்தால் மட்டும்போதாது, பணிநீக்கம் செய்யப்பட்ட 13 ஆயிரம் பேரையும் பணியமர்த்த வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கின் இறுதி விசாரணை, வியாழக்கிழமை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...