|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

18 December, 2011

4 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் ...

பொள்ளாச்சி லட்சுமி நகரை சேர்ந்தவர் முத்து குமார். இவரது மகள் மணிமேகலை. இவர் பொள்ளாச்சி காந்தி நகரை சேர்ந்த மாற்று திறனாளி ரத்தினகுமாரை காதலிப்பதாக கூறி திருமணம் செய்து கொண்டார். பின்னர் ரத்தினகுமாரின் சொத்துக்களை தனது தம்பிகள் ராமன், லட்சுமணன் பெயருக்கு எழுதி வாங்கி கொண்டு மணிமேகலை தலைமறைவாகிவிட்டார். இதுகுறித்து ரத்தினகுமார் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் போலீசில் புகார் செய்தார். விசாரணையில் மணிமேகலை இதேபோல கடத்தூரை சேர்ந்த சதீஷ், மானூரை சேர்ந்த சசி ஆகியோரை திருமணம் செய்து மோசடி செய்திருப்பதும் தற்போது 4-வதாக குணசேகரன் என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வருவதும் தெரியவந்தது. 


இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் மோசடி பெண் மணிமேகலை அவருக்கு உடந்தையாக இருந்த தாயார் வீரம்மாள், சகோதரி சித்ரா, தம்பிகள் ராமன், லட்சுமணன், பாஸ்கரன், குணசேகரன், சீனிவாசன் ஆகியோர் மீது மோசடி வழக்கு பதிவு செய்தனர். போலீசார் தங்களை தேடுவதை அறிந்ததும் மணிமேகலை உள்பட 8 பேரும் பொள்ளாச்சியில் இருந்து தப்பி ஓடிவிட்டனர்.தப்பி ஓடியவர்களை பிடிக்க இன்ஸ்பெக்டர் அம்மா துரை, சப்- இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.  இந்த தனிப்படை போலீசார் கோவை, ஈரோடு, சேலம் உள் ளிட்ட பகுதிகளுக்கு சென்று மோசடி பெண்ணை வலைவீசி தேடிவருகின்றனர். மோசடி பெண்மணி மேகலை போலீசில் சிக்கினால்தான் மேலும் ஏதாவது வாலிபரை இதுபோல் மோசடி செய்து சொத்துக்களை பறித்துள்ளாரா என்ற விபரங்கள் தெரியவரும்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...