|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

18 December, 2011

சாலை ஓரம் பிறந்து சில மணித்துளிகளே ஆன ஆண் குழந்தை...


திருவண்ணாமலை அடுத்த ஆவூர் கிராமத்தின் சாலை ஓரம் பிறந்து சில மணித்துளிகளே ஆன ஒரு ஆண் குழந்தை கிடந்தது. அதை திருவண்ணாமலை கோயிலுக்கு வந்த ஒரு ஆந்திரா பெண்மணி பார்த்து காவல்துறைக்கு தகவல் சொல்லி அதை கொண்டு வந்து திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் கடந்த 10ந்தேதி சேர்த்தார். அக்குழந்தை தீவிர சிகிச்சை அளித்து இன்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அன்சுல்மிஸ்ராவிடம் குழந்தையை கொண்டு வந்து தந்தனர். அதை அவர் தொட்டில் குழந்தை திட்ட ஒருங்கிணைப்பாளரிடம் தந்தார். அதை தனியார் தொண்டு நிறுவனத்தின் பாதுகாப்பில் வைத்து வளர்க்க தந்துள்ளனர். 

இது 3 மாதத்தில் 3வது குழந்தையாக தொட்டில் திட்டத்திற்க்கு வந்துள்ளது. ஒரு குழந்தை இறந்து போய்வுள்ளது. பச்சிலம் குழந்தைகள், எதுவும் அறிய இந்த உலகத்தை கண் திறந்து பார்க்கும் முன்பே வீசப்பட்டுள்ளது. உடல் சுகத்துக்காக தவறு செய்தவர்கள் அதை மறைக்கவே அ வறுமையில் வாடுபவர்கள் யார் இதை செய்திருந்தாலும் மன்னிக்க முடியாத குற்றம். 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...