|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

06 December, 2011

ஆசிரியைக்கு சரமாரி அடி பஞ்சாப் மாநில அரசுக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவு

பஞ்சாப் மாநில துணை முதல் மந்திரி சுக்பிர் சிங் பாதலின் மனைவியும், அகாலிதளம் கட்சி எம்.பி.யுமான ஹர்சிம்ரன் கவுரை சந்திக்க ஆசிரியை குழுவினர் 05.12.2011 அன்று சென்றனர்.அப்போது, அவருடைய வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த அகாலிதளம் கட்சி பிரமுகர் பல்வீந்தர் சிங், ஆசிரியை வரிந்தர் கவுர் என்பவரை சரமாரியாக அடித்து உதைத்தார். இதையடுத்து மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவர் நீதிபதி ஜகதீஷ் பல்லா மற்றும் ஆணையத்தின் மூன்று உறுப்பினர்கள், தானாக முன் வந்து 06.12.2011 அன்று வழக்கு பதிவு செய்தனர். மேலும், இது குறித்து விளக்கம் அளிக்குமாறு பஞ்சாப் மாநில அரசுக்கு நோட்டீசு அனுப்பவும் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...