|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

06 December, 2011

சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை நீக்க நடவடிக்கை

இன்றைய காலகட்டத்தில் பேஸ்புக், ஆர்குட், டுவிட்டர், கூகுள் பிளஸ் என பல்வேறுபட்ட சமூக வலைதளங்கள் இணையத்தில் இயங்கி வருகின்றன. இதில் சர்ச்சைக்குரிய வகையில் இந்திய தலைவர்கள் மற்றும் மத வழிபாடு குறித்து கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

இதனை கருத்து சுதந்திரம் என்ற பெயரில் இறையாண்மைக்கு மீறி பலவித கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன. சில சமூக விரோதிகளும், தீவிரவாதிகளும் இந்த சமூக வலைதளங்களை தங்களுக்கு சாதகமாகவும் பயன்படுத்திக் கொண்டு வருகின்றன.இந்நிலையில், டெல்லியில் உள்ள மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சர் கபில் சிபலை, இணையதள சமூக வலை தளங்களின் இந்திய பிரதிநிதிகள் சந்தித்து பேசினர்.

இந்த சந்திப்புக்கு பின்னர் பேட்டியளித்த கபில்சிபல், சமூக வலைதளங்களில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய கருத்துக்கள், புகைப்படங்கள், கார்ட்டூன்கள், போட்டூன்கள் அனைத்தையும் நீக்க அரசு நடவடிக்கை எடுக்கும். வலைதளங்களில் உள்ள கருத்துக்களால் பலரின் மனது புண்பட்டுள்ளது.  மக்களின் மத உணர்வுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால்தான் இந்த நடவடிக்கையை அரசு எடுக்க இருக்கிறது என்றார். (இவனுங்க அடிக்கிற கொல்லைல இந்தியாவே நாறுது. )

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...