|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

06 December, 2011

எட்டே நாளில் கணவனுக்கு கடிதம் காதலனுடன் எஸ்கேப்!

மதுரை திருமங்கலத்தை சேர்ந்தவர் தனமணி. இவருடைய மகள் திவ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). திவ்யாவை கடந்த 28.11.2011 அன்று மதுரை திருமங்கலத்தில் தன்னுடைய அக்காள் மகனுக்கு திருமணம் செய்து வைத்தார் தனமணி.திருமணமான எட்டாவது நாளான 05.12.2011 அன்று மருந்து கடைக்கு சென்று வருதாக வெளியே கிளம்பிய திவ்யா மாலை வரை வீடு திரும்பவில்லை.திவ்யாவை பல இடங்களில் தேடியும் அவரைப் பற்றிய செய்தி கிடைக்கவில்லை. அவருடைய படுக்கை அறையில் கடிதம் ஒன்று சிக்கியது. அதில் 
 
என்னை மன்னித்துவிடுங்கள். என்னை எனது பெற்றோர் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்துவிட்டனர். அதனால் உங்களுடன் என்னால் சேர்ந்து வாழ முடியவில்லை. என் காதலன் பிரபுவுடன்  நான் செல்கிறேன். என்னை யாரும் தேடவேண்டாம். நீங்கள் இன்னொரு பெண்ணை திருமணம் செய்துகொள்ளுங்கள். நான் என் காதலனை கணவனாக்கிவிடுறேன் என்று தாலி கட்டிய கணவனுக்கு திவ்யா கடிதம் எழுதி வைத்திருந்தார்.திவ்யாவை காணவில்லை என்று மதுரை திருமங்கலம் போலீசில் புகார் செய்திருந்தனர் அவரது பெற்றோர். போலீசார் வீட்டில் சோதனை செய்தபோது, இந்த கடிதம் அவர்கள் கையில் சிக்கியது. அப்போது இந்த தகவல் தெரியவந்தது. வேறொரு வாலிபருடன் திவ்யா சென்றுவிட்டதால், மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று தாலி கட்டிய கணவன், காவல்நிலையத்தில் போலீசாரிடம் கூறிவிட்டு சோகத்துடன் வீடு திரும்பினார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...