|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

03 December, 2011

கள்ளக்காதலைக் கண்டித்த மகளைக் கொல்ல முயன்ற தாய். தந்தை!

நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் நகரிலுள்ள நாட்டாமை தெருவிலிருக்கும் மாரியப்பன், இவரது மனைவி சீதாலட்சுமி. இவர்களுக்கு தேவி,சித்ரா என வயதிற்குவந்த இரு மகள்கள் உள்ளனர்.          தேவி தனியார் கல்லூரியிலும்,சித்ரா வாசுதேவநல்லூர் பள்ளியிலும் படித்துவருகின்றனர்.         ஆளான பெண்பின்ளைகளிலிருந்தும் சீதாலட்சுமிக்கு ஆசை தணியவில்லை. மோகமே வாழ்க்கை என்றிருந்தவளுக்கு பக்கத்து தெரு எலெக்ட்ரிஷியன் மாரியப்பனோடு சரச சல்லாபத்தைத் தொடர்ந்திருக்கிறார். 



பல ஆண்டுகளாக நடக்கும் இவர்களின் கள்ள உறவுகளுக்கு கணவன் மாரியப்பன் வெண் சாமரம் வீசியுள்ளார். பெற்ற தாயோ கள்ளக்காதலுடன் அதற்கு தந்தையே உடந்தை என்பதையறிந்து துடித்துப்போன மகள்கள்,  இந்தவயதில் தேவைதானா? மானம் போகுதே  என பெற்றவளைக் கண்டித்தனர். இறுகிப்போன மோகவெறி விடுவதாக இல்லை.இதையறிந்த தாயின் கள்ளக்காதலன் மாரியப்பன் ஒருநாள், தேவியிடம் தகாத முறையில் நடக்க முயல, இதுகுறித்து தன் தாய் சீதாலட்சுமியிடம் தெரிவித்தார் தேவி.

ஆனால் கண்டிக்க வேண்டிய தாய் சீதாலட்சுமி கண்டிக்காமால், தன்கள்ளக்காதலனுக்கு ஆதரவாகப் பேச,அதனால் அதிருப்தியடைந்த தேவி விஷயத்தை தன்து உறவினர்களிடம்  தெரிவித்துக் கதறினார். இதனால் ஆத்திரமடைந்த சீதாலட்சுமி,கணவர் மற்றும் கள்ளக்காதலன் மாரியப்பன் மூவரும் சேர்ந்து தேவியைத்துப்பட்டாவால் கழுத்தை இறுக்கிக் கொல்ல முயன்றனர்.  அவர்களின் பிடியில் போராடித்தப்பிய தேவி வாசுதேவநல்லூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சண்முகவேல்,விசாரணை நடத்திய தோடு தாய்சீதாலாட்சுமி,கள்ளக்காதலன்,கணவர் மூன்று பேரையும் கைது செய்தார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...