|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

10 January, 2012

ஊட்டச்சத்து குறைபாடு தேசிய அவமானம்...


நாட்டில் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக உலகில் 3 குழந்தைகளில் ஒரு குழந்தை இந்திய குழந்தை யாக உள்ளது என்றும், இது இந்திய தேசத்திற்கு அவமானமாக இருக்கிறது என்றும் பிரதமர்

 பிரதமர் கவலையுடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் . இது தொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது: ஊட்டச்சத்து குறைபாடு நீக்கிட அரசு முனைந்து செயல்பட்டு வருகிறது. பல்முக விழிப்புணர்வு திட்டங்கள் 200 மாவட்டங்களில் செயல்படுத்தப்படவிருக்கிறது. இந்த நிலை முற்றிலும் சீர்செய்யப்பட வேண்டும். ஊட்டச்சத்து குறைபாடு இருப்பது என்பது நமக்கு ஏற்பட்டுள்ள தேசிய அவமானமாக இருக்கிறது. மாநில அரசுகளும் இது தொடர்பான திட்டத்திற்கு துணையாக நின்று செயலாற்ற வேண்டும்.

ஊட்டச்சத்து குறைவு நாட்டில் படு வேகமாக வளர்ந்து வருகிறது. இது தடுக்கப்பட வேண்டும். நாட்டின் உற்பத்தி அளவு அதிகரித்து வந்தபோதிலும் இந்த நிலையை இன்னும் குறைக்க முடியாத நிலையில் இருக்கிறோம். 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 42 சதவீதம் எடை குறைவாக இருக்கின்றன. குடிநீர் மற்றும் சுகாதாரம் பேணிக்காத்திட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அங்கன்வாடி மற்றும் பள்ளிகளில் சுகாதாரம் வளர்க்கும் இன்னும் செயலாற்ற வேண்டும். குழந்தைகள் ஒருங்கிணப்பு திட்டத்தை மட்டுமே நம்பி அரசு சமாளிக்க முடியாது. இவ்வாறு அவர்

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...