|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

23 January, 2012

மதுரை சிறையில் சிறைக்கைதியை சந்திக்க நேருவுக்கு அனுமதி மறுப்பு

மதுரை சிறையில், ஜெயிலர் அறையில் "குண்டாஸ்' கைதியை சந்திக்க தி.மு.க., முன்னாள் அமைச்சர் நேருவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. திருச்சியைச் சேர்ந்த தி.மு.க., பிரமுகரும், நேரு ஆதரவாளருமான விஜய் என்ற காஜாமலை, சமீபத்தில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். திருச்சி சிறையில் இருந்த இவர், இடநெருக்கடி காரணமாக, ஜன., 13ல், மதுரைக்கு இடம் மாற்றப்பட்டார். இன்று காலை 11.20 மணிக்கு இவரை சந்திக்க நேருவும், திருச்சி முன்னாள் துணை மேயர் அன்பழகனும் சிறைக்கு வந்தனர். ஜெயிலர் அறையில் காஜாமலையை சந்திக்க விரும்பினர். அமைச்சராகவும், வேறு அரசு பொறுப்பில் இல்லாததாலும், சிறை விதிகளை காரணம் காட்டி, ஜெயிலர் அறையில் சந்திக்க அதிகாரிகள் அனுமதி மறுத்தனர். இதனால் கைதிகள், உறவினர்கள் சந்திக்கும் வழக்கமான இடத்தில், காஜாமலையை, நேரு 7 நிமிடங்கள் சந்தித்தார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...