|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

20 January, 2012

பாலியல் பலாத்கார சட்டத்தில் திருத்தம்!

ஓரினச் சேர்க்கையாளர்களால் ஆண்களுக்கும் பாலியல் தொந்தரவுகள் அதிகரித்து வருவதையடுத்து, பாலியல் பலாத்கார சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை வகுத்துள்ள இந்த மசோதாவின்படி, தற்போதுள்ள பாலியல் பலாத்கார சட்டத்தில் காணப்படும் கற்பழிப்பு என்ற வார்த்தை நீக்கப்பட்டு, பாலியல் பலாத்காரம் என்ற வார்த்தை சேர்க்கப்படுகிறது. இதன் மூலம் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் மட்டுமே இதுவரை குற்றமாக இருந்த நிலை மாறி, ஆண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கும் இனி தண்டனை அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதுதவிர பெண்கள் மீதான ஆசிட் வீச்சு குற்றங்களுக்கு தனி சட்டம் கொண்டுவரவும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை திட்டமிட்டுள்ளது

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...