|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

20 January, 2012

நாட்டிலேயே முதல் மாநிலமாக, முழுவதும் தானியங்கி பொதுக் கழிப்பிடங்கள் கேரளாவில் அமைகிறது

மார்ச் மாத இறுதிக்குள் கேரள மாநிலத்தில் 450 மின்-கழிப்பறைகள் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில், நாட்டிலேயே முதல் மாநிலமாக, முழுவதும் தானியங்கி பொதுக் கழிப்பிடங்கள் கட்டுமான கேரளாவில் அமைகிறது என்பது குறிபிடத்தக்கது.இந்த இ-கழிப்பறையில், தானியங்கி கதவுகள், சக்திகூடிய நீர் வெளியேற்றம், தானே தூய்மைப் படுத்திக் கொள்ளும் அமைப்பு, கிருமி நீக்கிகள் இவற்றோடு, இவை எல்லாவற்றையும் எஸ்.எம்.எஸ் அலர்ட் மூலம் கட்டுப்படுத்தும் கட்டுப்பாட்டு அறை, கழிப்பறை தொட்டியில் உள்ள நீர் அளவு கண்காணிப்பு அமைப்பு, ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் அதை நீக்க பயோ-காஸ் அமைப்பு அனைத்தும் கொண்டதாக இருக்கும்.இந்தத் திட்டம் திருவனந்தபுரத்தில் உள்ள ஈராம் குழுமத்தைச் சேர்ந்த ஈராம் சையண்டிபிக் சொலுஷன்ஸ் நிறுவனத்தின் மூலம் செயல்படுத்தப்படவுள்ளது. இந்த குழுமம் ஏற்கெனவே மத்தியக் கிழக்கு நாடுகள் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இதுபோன்ற அமைப்புகளை செயல்படுத்தி வருகிறதாம்.தற்போது 150 இ-கழிப்பறைகள் பல்வேறு இடங்களில் நிறுவப்பட்டுள்ளதாகவும், இ-கழிப்பறைகளின் செலவு ரூ.3,50,000 முதல் 8,50,000 வரை ஆகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...