|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

25 January, 2012

கை சுத்தமானவர்களை தேர்ந்தெடுங்கள் அன்னா குழு...

தாங்கள் எந்த கட்சிக்கும் மற்றும் எந்தவொரு தனிப்பட்ட நபருக்காகவும் தேர்தல் பிரசாரம் செய்யவில்லை என்றும், குற்றப்பின்னணி இல்லாத மற்றும் சுத்தமானவர்களை தேர்ந்தெடுக்கவே தாங்கள் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ளதாக அன்னா குழு தெரிவித்துள்ளது. பஞ்சாப், உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தலையொட்டி, அன்னா குழு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. அர்விந்த் கெஜ்ரிவால், கிரண் பேடி உள்ளிட்ட முக்கிய உறுப்பினர்கள் இல்லாத நிலையில், மணிஷ் சிசோடியா தலைமையிலான அன்னா குழு, தற்போது பஞ்சாபில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. அங்கு, பத்திரிகையாளர்களை சந்தித்த சிசோடியா கூறியதாவது, வலுவான ஜன் லோக்பால் மசோதாவை வலியுறுத்தும் தங்களது போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மத்திய அரசால் தாக்கல் செய்யப்பட்டுள்ள லோக்பால் மசோதாவால், ஒருபோதும் ஊழலை ஒழிக்கவோ மற்றும் கட்டுப்படுத்தவோ முடியாது 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...