|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

25 January, 2012

மேம்பாட்டு படிப்பு - ஓர் ஆய்வு...


நோபல் பரிசுபெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் கூறுவது என்னவெனில், "மக்கள் தங்களது வாழ்வை வளமிக்கதாக மாற்றிக்கொள்ளும் பொருட்டு சுதந்திரம் வழங்குவதே மனித மேம்பாடு ஆகும். ஆனால் நாம் தற்போது வாழும் உலகில் ஏராளமான முரண்பாடுகள் உள்ளன. 19ம் நூற்றாண்டிலிருந்து பார்த்தால், ஒருவரின் தனிநபர் வருமானம் பல மடங்குகள் கூடியுள்ளது. அதேசமயம், மீண்டும் மீண்டும் ஏழைகளாகவே ஆகிக் கொண்டிருக்கும் மக்கள் மிக அதிகமாகவே உள்ளனர்" என்கிறார்.
இந்த முரண்பாடுகள், உலகளாவிய சமூக, பொருளாதார மற்றும் அரசியல் சூழல்களில் நிலவும் பிரச்சினைகளை, சிறந்த அறிவு மற்றும் பயிற்சியின் மூலம் தீர்க்க வேண்டும் என்பதை உணர்த்துகின்றன. இயற்கை அறிவியலும், தொழில்நுட்பமும் அவற்றுக்கான தீர்வை வழங்கினாலும், அவற்றுக்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளன. இத்தகைய சிக்கல்களைப் பகுப்பாய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள, சமூக அறிவியல் துறைகளிலிருந்து அறிவும், திறன்களும் தேவைப்படுகின்றன. இதைத்தான் மேம்பாட்டு படிப்புகளும் நோக்கமாக கொண்டுள்ளன.
மக்களது வாழ்க்கை மேம்பாட்டை ஆய்வு செய்வதை, மேம்பாட்டுப் படிப்புகள் நோக்கமாக கொண்டுள்ளன. இத்துறையில், நடைமுறை அல்லது கற்பித்தலின் கொள்கைத் தொடர்பு மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றில், மேம்பாட்டுப் படிப்பு ஈடுபட்டுள்ளது. அதேசமயம், மேம்பாட்டுப் படிப்புகளை கற்பிக்கும் ஆசிரியர்கள் மத்தியில், உள்ளூர் மற்றும் உலகளாவிய சமமின்மைத் தொடர்பான ஆர்வம் அதிகரித்து வருகிறது. செல்வம், வளங்கள் ஆகியவற்றுக்கிடையேயான சமமின்மை மற்றும் பாலின வேறுபாடுகள் ஆகிய அம்சங்களும், மேம்பாட்டுப் படிப்புகளில் அடங்கும்.
உலகில், வறுமையில் வாழும் மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதே மேம்பாடு என்று பொதுவாக கருதப்படுகிறது. அதேபோன்று, வேளாண்மையில், இயற்கை அறிவியலை புகுத்துவதும் வலியுறுத்தப்படுகிறது. எனவே, மேம்பாட்டுப் படிப்புகள் என்பதன் கருத்தாக்கத்தில் பலவித அம்சங்கள் கலந்துள்ளன. "பல் பரிணாம மேம்பாட்டிற்காக, பலவிதமான முயற்சிகளில், மேம்பாட்டுப் படிப்புகள் என்ற கருத்தாக்கம் நம்பிக்கை கொள்கிறது. மிகப்பெரிய முதலாளித்துவ சர்வதேச சூழல், குறிப்பிட்ட கொள்கைகள், நிறுவனங்கள், மேம்பாட்டுப் பயன்களைப் பாதுகாக்க, பலவிதமான ஏஜென்சிகள் மூலமாக நேரடியாக தலையிடுதல் ஆகிய செயல்பாடுகளிலுள்ள, கட்டமைப்பு மாற்றம் மற்றும் சமூக-பொருளாதார மாற்றங்களின், வரலாற்று ரீதியான மற்றும் பெரியளவிலான தாறுமாறான செயல்பாடுகள் ஆகியவற்றின் மீது மேம்பாட்டு படிப்புகள் ஒரு சவாலான அணுகுமுறையாகும்.
இந்தப் படிப்பை மாணவர்கள் தேர்ந்தெடுக்க காரணம் முதுநிலையில், மேம்பாட்டு படிப்புகளை எடுத்துப் படிப்பதே சிறந்த விஷயமாக கருதப்படுகிறது. மேம்பாட்டுப் படிப்புகளின் பாடத்திட்டமானது, அனைத்துவித பின்னணிகளிலிருந்து வரும் மாணவர்களுக்கும் சமமான வாய்ப்புகளை தரும் விதமாக அமைந்துள்ளது. backgrounds. Philosophy of development research; perspectives in science and technology; history and theories of development; women history, development economics போன்ற படிப்புகள், மாணவர்களுக்கு தெளிவான புரிதலை வழங்குகின்றன. மேலும், Urban planning; law and development; culture and development; agriculture and rural development and sustainable development போன்ற படிப்புகள், நடைமுறை ரீதியில், மாணவர்களிடையே, விவாதங்களையும், கலந்துரையாடல்களையும் உருவாக்குகின்றன. மேம்பாட்டு படிப்புகளை முடித்த மாணவர்கள், United Nations organisations, inter-governmental organizations (IGOs), NGOs, the World Bank, private sector consultancy and aid firms, journalistic jobs, and research institutions போன்ற நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளை பெறலாம். மேலும் பலர், கொள்கைப் படிப்புகள், பொருளாதாரம், நகர்மய படிப்புகள், சுற்றுச்சூழல் படிப்புகள் ஆகிய துறைகளில் மேற்படிப்புகளை படிக்கிறார்கள்.
மேலும், சென்னை-ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களில், மேம்பாட்டுப் படிப்புகள் துறையில், நுழைவுத் தேர்வு மூலமாக, ஒருங்கிணைந்த முதுநிலைப் படிப்பையும் மேற்கொள்ளலாம். நம் நாட்டில் நிலவும் பலவிதமான முரண்பட்ட சூழல்களை சமாளிக்க, மேம்பாட்டு படிப்புகள் உதவும் என்ற கருத்துக்கள் நிலவுகின்றன. மேலும், இந்தப் படிப்பானது வெறும் தியரி நிலையிலானது அல்ல. Field trips, case studies, dissertations and projects போன்ற பல அம்சங்கள் நிறைந்து, இந்தப் படிப்பை ஒரு சிறப்பு வாய்ந்ததாக மாற்றுகின்றன. வகுப்பறைக்கு வெளியேயும் சிறந்த அனுபவம் கிடைக்கிறது.
மேம்பாட்டு படிப்பின் எதிர்காலம் உலகிலுள்ள வளரும் நாடுகளின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் அதிகரித்து வருகிறது என்று புள்ளி விபரங்கள் கூறினாலும், ஏழை - பணக்காரர் ஆகிய 2 தரப்பினருக்கிடையேயான வித்தியாசம் நாளுக்குநாள் மிகவும் அதிகரித்து வருகிறது. எனவே, ஒரு சில செல்வந்தர்களின் வளர்ச்சியை நாட்டின் வளர்ச்சியாக காட்டுவதை விட்டுவிட்டு, உண்மையான சிக்கலுக்கு தீர்வுகாண வேண்டியுள்ளது.பொருளாதாரம், கலாச்சாரம், தொழில்நுட்பம் மற்றும் சமூக மாற்றங்கள் நிகழும் முக்கிய காலகட்டங்களில், மேம்பாட்டுப் படிப்புகள், நமக்கான ஒரு சுதந்திரமான கல்வியாக இருக்கிறது. மேம்பாடு தொடர்பாக, ஸ்பெஷலிஸ்டுகளை விட, ஜெனரலிஸ்டுகளே, ஒரு முழுமையான புரிந்துணர்வை பெற வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே, ஒரு ஜெனரலிஸ்டாக இருக்க விரும்புபவருக்கு, மேம்பாட்டு படிப்புகள் ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கிறது.
இந்திய அளவில் மேம்பாட்டுப் படிப்புகளை வழங்கும் சில முக்கிய கல்வி நிறுவனங்கள்
*  Tata Institute of Social Sciences - www.tiss.edu
*  Madras Institute of Development Studies - www.mids.ac.in
*  Centre for Development Studies - www.cds.edu 
*  Indira Gandhi Institute of Development Research - www.igidr.ac.in  
*  IIT-Bombay - www.iitb.ac.in
*  IIT-Madras

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...