|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

30 January, 2012

இந்தியாவை பழிவாங்குவோம் ...


 நாங்கள் எப்போதும் பாகிஸ்தானை பாதுகாப்பதில் ‌உறுதியாக இருக்கின்றோம் என்றும், அங்கு தான் வாழ விரும்புகிறோம் என்றும், காஷ்மீர் மக்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும், இதற்கென இந்தியாவுக்கு எதிராக போராடவும் அனைவரும் தயாராக வேண்டும் என்றும், அமெரிக்கா இஸ்லாமிய நாடுகளுக்கு எதிராக செயல்படுவதாகவும் பாகிஸ்தானில் நடந்த மாபெரும் பேரணியில் ஜமாஉத்தவா அமைப்பு தலைவர் ஹபீஸ் சயீத் பேசினார், முல்தானில் நடந்த பேரணியில் 40 க்கும் மேற்பட்ட மத மற்றும் அரசியல் கட்சியினர் பங்கேற்றனர் . இந்த பேரணியில் மும்பை வழக்கில் தொடர்புடைய ஜாமத் உத் தவா தலைவர் ஹபீஸ் சயீத் ஆவேசமாக பேசினார். இந்த பேரணியில் அவர் பேசுகையில் கூறியதாவது: இந்தியாவிற்கு எதிரான ஜம்ஜக்தா எக்ஸ்பிரஸ் ரயில் தாக்குதலில் இருந்து எங்களின் பணி துவங்கி நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் நல்ல படியாக நடக்கும்.

சுதந்திர காஷ்மீரைத்தான் நாங்கள் விரும்புகிறோம். அமெரிக்கா - பாகிஸ்தான் உறவை மறு ஆய்வு செய்ய வேண்வும். இந்நாட்டினர் இஸ்லாம் நாட்டுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர் என்றார். பாகிஸ்தான் மக்கள் இணைந்து உறுதியான நிலைப்பாட்டை எடுதத்தோமானால் அமெரிக்காவின் சதியை உடைத்து எறிய முடியும் என்றார். இந்த பேரணியில் முன்னாள் ஐ.எஸ்.ஐ., ஹமீத் ஹூல், முக்கிய பிரமுகரான ஷேக்ரசீத் அகம்மது, ஜியா உல் ஹக் மகன் இஜாஸ் உல் ஹக் உள்ளிட்ட சுமார் 40 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...