|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

30 January, 2012

குழந்தைகளை நீர்த்தொட்டியில் மூழ்கடித்து கொலை!

குழந்தைகளை நீர்த்தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்த வழக்கில், தாய்க்கு நாமக்கல் மாவட்ட விரைவு கோர்ட் இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் கடுங்காவல் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது. நாமக்கல் மாவட்டம் நடராஜபுரத்தை சேர்ந்தவர் நேரு. இவருக்கு முதல் மனைவியின் மூலம், சக்திவேல் மற்றும் ஷாலினி என்ற 2 குழந்தைகள் உள்ளனர். முதல் மனைவி இறந்தபடியால், நேரு, அமலா என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், கடந்த 2010ம் ஆண்டு அக்டோபர் மாதம் 14ம் தேதி, அமலா, 2 குழந்தைகளை வீட்டினுள் இருந்த நீர்த்தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்தார். இதுதொடர்பாக, அமலா மீது நாமக்கல் போலீஸ் ஸ்டேசனில் வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கு இன்று மாவட்ட விரைவு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி நசீர் அகமது, அமலாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...