|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

08 March, 2012

மனைவியை கொன்ற போலீஸ்காரருக்கு 10 ஆண்டு சிறை!

நாகை மாவட்டம், வாய்மேடு உடையதேவன்காட்டை சேர்ந்தவர் நாகராஜன்(39). நாகை ஆயுதப்படை காவலர். அதே பகுதியை சேர்ந்த உமாராணியை (23) காதலித்து 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துகொண்டனர். ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் வரதட்சணை கேட்டு உமாராணியை நாகராஜன் கொடுமைப்படுத்தி வந்தார். இதுபற்றி அறிந்த உமாராணியின் பெற்றோர், அங்கு சென்று நாகராஜனை கண்டித்தனர். இதில், ஆத்திரமடைந்த நாகராஜன், உமாராணியை அவரது பெற்றோர் முன்பே தீவைத்து கொளுத்தினார். அதே இடத்தில் அவர் இறந்தார்.  இது குறித்து வாய்மேடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். வழக்கை நேற்று விசாரித்த நாகை மாவட்ட நீதிபதி சதீஷ்குமார், கொலை குற்றத்திற்காக 10 ஆண்டு சிறை தண்டனை, ரூ.3 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...