|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

08 March, 2012

ஆசிரியர் ஆவதே லட்சியம்: 2 கண்களும் தெரியாத பிளஸ் 2 மாணவி !

ஆசிரியர் ஆவதே தனது லட்சியம் என திருக்கோவிலூர் டேனிஷ் மிஷன் பெண்கள் விடுதி மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதும் 2 கண்களும் தெரியாத மாணவி ரேவதி தெரிவித்தார். திருக்கோவிலூர் அருகே மேட்டுச்சேரியைச் சேர்ந்தவர் எம்.ரேவதி(17). இவரது தந்தை முனியப்பிள்ளை(40) இவர் இறந்துவிட்டார். ரேவதியின் தாயார் மல்லிகா(35). உடன்பிறந்த சகோதரி நிர்மலா (25) இவரது சகோதரர் டெம்போ டிரைவராக பணிபுரிகிறார். ரேவதி இன்று திருக்கோயிலூர் அங்கவை, சங்கவை பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதினார். தேர்வு எழுதுவதற்கு முன்பாக நமது செய்தியாளரிடம் பேசிய ரேவதி, நன்கு படித்து ஆசிரியர் ஆவதே தனது லட்சியம் எனத் தெரிவித்தார்

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...