|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

08 March, 2012

ஒரு எம்எல்ஏ கூட இல்லை; எங்களுக்கு வாய்ப்பு அளியுங்கள்!

சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் மதிமுக பொதுச்செயலர் வைகோ அக்கட்சி வேட்பாளர் சதன்திருமலைக்குமாரை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்து வருகிறார். நேற்று மாலை களப்பாகுளம், சீவலராயனேந்தல், ராமநாதபுரம், நெடுங்குளம், திருமலைகொழுந்துபுரம், வேப்பங்குளம், ஆள்கொண்டார்குளம், செந்தட்டி ஆகிய கிராமங்களில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், இந்த தேர்தலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி கொடுங்கள் உங்களோடு இருந்து நாங்கள் பணியாற்ற தயாராக இருக்கிறோம் மதிமுக வேட்பாளர் நல்லவர், மக்களுக்காக போராடுவார் சட்டசபையில் உங்களுக்காக குரல் கொடுக்க எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் அதிமுக, தேமுதிக, திமுக வுக்கு எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். எங்களுக்கு ஒரு எம்எல்ஏ கூட இல்லை இந்த முறை எங்களுக்கு வாய்ப்பு அளியுங்கள் என அவர் வாக்காளர்களை கேட்டுக்கொண்டார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...