|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

06 March, 2012

திண்டுக்கல் மாணவிக்கு டெண்டுல்கருடன் டின்னர்!

தனியார் பிஸ்கெட் நிறுவனம் நடத்திய போட்டியில் வெற்றி பெற்ற திண்டுக்கல் மாணவிக்கு, டெண்டுல் கருடன் டின்னர் சாப்பிடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. திண்டுக்கல் எஸ்எம்பிஎம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கும் மாணவி தயாஸ்ரீ. இவர் மாநில அளவில் நடைபெற்ற சன்பீஸ்ட் மில்கி மேஜிக் போட்டியில் கலந்து கொண்டு முதல் இடத்தைப் பெற்றுள் ளார். இப்போட்டி மாவட்ட, மண்டல, மாநிலம் என்று மூன்று கட்டமாக நடை பெற்றது.


இதில் உளவியல், உடற்தகுதி, தனித்திறன், ஆளுமை என்று பல்வேறு நிலைகளில் போட்டி நடந்தது. மாநில அளவில் முதலிடம் பெற்ற இவருக்கு 80 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகையும், ஒரு வாரம் ஐரோப்பாவில் கல்வி சுற்று லாவுக்கான செலவுத் தொகையும் வழங்கப்பட உள்ளது. இதுதவிர நட்சத்திர கிரிக்கெட் வீரர் டெண் டுல்கருடன் டின்னர் சாப்பிடும் வாய்ப்பும் இந்த மாணவிக்கு கிடைத் துள்ளது. மாணவியின் பெற்றோர் பாபு, சிவகுமாரி ஆகியோர் சின்னாளபட்டியில் டாக்டர்களாக உள்ளனர். வெற்றி பெற்ற மாணவியை பள்ளித் தாளாளர் கனகசபை, முதல்வர் ஜெயப் பிர காஷ் மற்றும் ஆசிரியர் கள் உள்பட அனை வரும் பாராட்டினர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...