|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

13 December, 2012

விஸ்வரூபம் மாட்டிக்கொண்டு...


விஞ்ஞானத்திற்கும், வியாபாரத்திற்கும் இடையே நடிகர் கமலின் விஸ்வரூபம் மாட்டிக் கொண்டு இருக்கிறது என்று கவிஞர் வைரமுத்து கூறினார்.  தஞ்சையில் கவிஞர் வைரமுத்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.  அப்போது அவர் காவிரி நீரை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டிற்கு கீழ்தான் மத்தியஅரசு உள்ளது.  தண்ணீர் திறந்துவிட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது என்றாலும் அந்த தண்ணீர் தர மறுப்பது மனிதர்கள்தான். இது கண்டிக்கத்தக்கது. காவிரி தண்ணீரை கர்நாடகம் வழங்க வலியுறுத்தி நடந்த போராட்டத்தில் வெற்றி தமிழர் பேரவையும் பங்கேற்றது.  சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பதால் குறிப்பிட்ட சதவீதம் பாதிக்கும் என்பதில் கருத்து வேறுபாடு கிடையாது. உலகமயமாக்கலின் விளைவுதான் இது. அன்னிய முதலீட்டை சுத்தமாக அனுமதிக்க முடியாது என்று கூற இயலாது. எந்தந்த நிபந்தனைக்கு உட்பட்டு அனுமதிக்கிறோம் என்பதில் தான் இந்தியாவின் எதிர்காலம் உள்ளது. நடிகர் கமலின் விஸ் வரூபம் படத்தை டி.டி.எச். சில் ஒளிபரப்புவது குறித்து பிரச்சினை என்று கேட்கிறீர்கள். விஞ்ஞானத்திற்கும், வியாபாரத்திற்கும் இடையே விஸ்வரூபம் மாட்டிக் கொண்டு இருக்கிறது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...