|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

08 February, 2013

பிழைப்பு தமிழனிடம் பறப்பது இலங்கை தேசிய கொடி!


சென்னை தியாகராயர் நகரில் தி ரெசிடன்சி டவர்ஸ் என்ற நட்சத்திர ஹோட்டல் இயங்கி வருகிறது. அங்கு இலங்கையின் தேசிய கொடி பறக்கவிடப்பட்டிருந்தது. இதற்கு தமிழர் எழுச்சி இயக்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த இயக்கத்தினர் நட்சத்திர ஹோட்டலை கருப்புக் கொடியுடன் முற்றுகையிட்டனர். பின்னர் ஹோட்டல் நிர்வாகிகளிடம் இலங்கை தேசியக் கொடியை அகற்ற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து அந்த ஹோட்டலில் இருந்து சிங்கள தேசியக் கொடி அகற்றப்பட்டது. முன்னதாக மகிந்த ராஜபக்சேவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தியாகராயர் நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தை இழுத்து மூடும் போராட்டத்தை தமிழர் எழுச்சி இயக்கத்தினர் நடத்தினர்.இந்த இயக்கத்தினர் நட்சத்திர ஹோட்டலை கருப்புக் கொடியுடன் முற்றுகையிட்டனர். பின்னர் ஹோட்டல் நிர்வாகிகளிடம் இலங்கை தேசியக் கொடியை அகற்ற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து அந்த ஹோட்டலில் இருந்து சிங்கள தேசியக் கொடி அகற்றப்பட்டது. முன்னதாக மகிந்த ராஜபக்சேவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தியாகராயர் நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தை இழுத்து மூடும் போராட்டத்தை தமிழர் எழுச்சி இயக்கத்தினர் நடத்தினர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...