|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

02 November, 2011

திருச்சியில் பெற்ற தாய்க்கு 5 கோடியில் கோவில் துறையூரைச் சேர்ந்த சிதம்பரம்!

திருச்சியை அடுத்துள்ள துறையூரைச் சேர்ந்தவர் சிதம்பரம். இவரது மனைவி தனபாக்கியம். இவர்களது 4-வது மகன் சுரேஷ்குமார் தொழில் அதிபர். இவர் தனது தாயார் தன பாக்கியம் மீது மிகுந்த பாசம் வைத்திருந்தார். இந்நிலையில் தனபாக்கியம் 2007-ம் ஆண்டு பிப்ரவரி 1-ந்தேதி மரணம் அடைந்தார். அவரது நினைவாக துறையூரில் கோவில் கட்ட முடிவு செய்தார். இதற்காக அவர் 5 கோடி ஒதுக்கியுள்ளார். இக்கோவில் 30 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டு வருகிறது. அதில் 64 அடி உயரத்தில் நினைவுத் தூண் அமைத்துள்ளார். கோவிலின் நடுவில் தாயார் தனபாக்கியத்தின் வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. கோவில் வளாகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த அரங்கம் ஒன்று அமைக்கப்படுகிறது. 

இதை பொது மக்களுக்கு இலவசமாக வழங்க சுரேஷ்குமார் திட்டமிட்டுள்ளார்.இது குறித்து சுரேஷ்குமார், ’’எனது தாய் என் மீது காட்டிய பாசத்திற்கு ஈடு இணை எதுவும் இல்லை. அவர்தான் நான் அறிந்த தெய்வம். அவருக்கு நான் சேமித்து வைத்துள்ள பணத்தில் கோவில் கட்டி வருகிறேன். இதனை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் திறக்க திட்டமிட்டுள்ளேன். என் தாய்க்கு கோவில் கட்டுவதற்கு எனது மனைவி சாவித்ரி உதவியாக இருக்கிறார். இந்த உலகத்தில் பிறந்த அனைவரும் தாயை தெய்வமாக வழிபட வேண்டும். தாய்தான் எந்த வித பிரதிபலனும் எதிர்பாராமல் பாசம் காட்டுவார். தாயை உயர்வாக மதிக்கும் அனைத்து குழந்தைகளும் வாழ்வில் நிச்சயம் சாதனையாளர்களாக மாறுவார்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...