|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

02 November, 2011

லஞ்சம் தருவதில் முன்னிலை சீன, ரஷ்ய நிறுவனங்கள்!

வெளிநாடுகளில் நிறுவனங்களை நடத்த சீனா மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த நிறுவனங்களே அதிக லஞ்சம் தருவதாக ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.சர்வதேச அளவில் லஞ்சம் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளும் Transparency International நிறுவனம் சமீபத்தில், லஞ்சம் கொடுப்போர் பற்றிய அட்டவணை ஒன்றை வெளியிட்டது. 28 நாடுகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் முறையே 27 மற்றும் 28-ம் இடத்தைப் பிடித்து கடைசியில் உள்ளன. இந்த நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள், வெளிநாடுகளில் தொழில் நடத்த எந்த அளவுக்கு வேண்டுமானாலும் லஞ்சம் தரத் தயாராக உள்ளனவாம்.பிரிட்டன் எட்டாவது இடத்தையும் அமெரிக்கா ஒன்பதாவது இடத்தையும் பிடித்துள்ளன.டச்சு, சுவிட்சர்லாந்து, பெல்ஜியம், ஜெர்மனி மற்றும் ஜப்பான் நாடுகள் இதில் முதல் 5 இடங்களைப் பிடித்துள்ளன. அதாவது இங்கெல்லாம் நிறுவனங்கள் தங்கள் தொழிலுக்கு சாதகமான முடிவுகளைப் பெற லஞ்சம் தருவது குறைவு என்கிறது ஆய்வு.ஆனால் இந்தியாவில் பரவாயில்லை எனும் அளவுக்கு லஞ்சத்தின் நிலை உள்ளதாம். சீனா, ரஷ்யா அளவுக்கு மோசமாக இல்லாவிட்டாலும் ஓரளவு லஞ்சம் அதிகமாக உள்ள நாடு என்று வேண்டுமால் இந்தியாவைச் சொல்லலாம் என்கிறது இந்த ஆய்வு முடிவு.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...