|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

30 November, 2011

மனிதவளக் கருத்தரங்கம் அனுமதி அளிக்கக்கூடாது ஜெயலலிதாவுக்கு வைகோ!


டிசம்பர் 14, 15 தேதிகளில் இலங்கை தலைநகர் கொழும்புவில் “இன்டிடியூட் ஆப் ஹியூமன் டெவலப்மென்ட் அன்ட்டிரெய்னிங், ஸ்ரீலங்கா” என்ற நிறுவனத்தின் சார்பில் மனிதவளக் கருத்தரங்கம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதே போல கொழும்பு பல்கலைக்கழகம் டிசம்பர் 19, 20, 21 தேதிகளில் கொழும்பில் ஒரு கருத்தரங்கத்தை நடத்துகின்றது.
 
இதில் பங்கேற்க லட்சக்கணக்கான தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டது குறித்து எவ்விதக்கவலையும் கொள்ளாத, இந்தியாவின் பல பல்கலைக்கழகங்களில் இருந்தும் விரிவுரையாளர்கள் செல்கிறார்கள். அதே போல தமிழ்நாட்டின் சில பல்கலைக்கழகங்களில் இருந்தும் விரிவுரையாளர்கள் கலந்து கொள்ள ஆயத்தமாகி வருகிறார்கள். கருத்தரங்கம் நடத்தும் அமைப்பினர் அவர்கள் பெயர்களை வெளியிட்டு இருக்கிறார்கள்.  
 
இலங்கை மீது இந்தியா பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று தமிழகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ள நிலையில், தமிழகப் பல்கலைக்கழகங்களில் இருந்தும், அரசுக்கல்லூரிகளில் இருந்தும் விரிவுரையாளர்கள் இலங்கையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது, கோடிக்கணக்கான தமிழர்களின் உணர்வுகளைப்புண்படுத்துவதாக உள்ளது.
 
லட்சக்கணக்கான தமிழ் மக்களைக்கொன்று குவித்த கொலைகார இலங்கை அரசுக்கு ஆதரவு தெரிவித்தது போலவும் ஆகிறது. எனவே தமிழகத்துப் பேராசிரியர்கள் இலங்கை செல்வதை தவிர்த்திடுமாறு கேட்டுக் கொள்கிறேன். தமிழக அரசும் தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் இருந்தும், அரசு நிறுவனங்களில் இருந்தும் யாரையும் இலங்கை செல்ல அனுமதி அளிக்கக்கூடாது என்று ம.தி.மு.க. சார்பில் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...