|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

16 January, 2012

புற்றுநோய் பாதிப்பை தடுக்கும் நீரிழிவு மருந்துகள்!


டைப் 2 நீரிழிவு நோய்க்காக உட்கொள்ளப்படும் மருந்துகள் புற்றுநோய் செல்களை கட்டுப்படுத்தும் என்றும் சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் அந்த மருந்துகள் எவ்விதம் செயல்புரிகின்றன என்பது கண்டறியப்படவில்லை என்று தென்கொரியா ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். தென்கொரியா நாட்டின் சியோல் தேசிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜேம்ஸ் டிராஸ்கோ, ஏராளாமான நீரிழிவு நோயாளிகளிடம் இந்த ஆய்வினை மேற்கொண்டார். அப்போது டைப் 2 நீரிழிவினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் உட்கொள்ளும் மருந்துகள் மார்பு, கல்லீரல், லிவர் போன்ற இடங்களில் புற்றுநோய் தோன்றுவதை தடுப்பதாக கண்டறியப்பட்டதாக தெரிவித்தார். புற்றுநோய் செல்கள் ஏற்பட்டாலும், இந்த மருந்துகள் செல்கள் வளர்ச்சியடைவதை தடுப்பதாகவும் கூறியுள்ள ஜேம்ஸ், அது எவ்விதம் செயல்புரிகிறது என்று கண்டறியப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

ஈஸ்ட்ரோஜன் சுரப்பு மார்பகப் புற்றுநோய் தாக்கியவர்களின் தசைகளை சிறிதளவு எடுத்து ஆய்வுக்கு உட்படுத்தினர். அப்போது நீரிழிவு மாத்திரைகள் மூலம் மார்பகத்தில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சி குறையத்தொடங்கியதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். மேலும் ஈஸ்ரோஜன் சுரப்பும், மார்பகத்தின் வளர்ச்சியும் அதிகரித்ததும் ஆய்வில் தெரியவந்தது. மார்பகப் புற்றுநோய் தாக்கியவர்களுக்கு ஈஸ்ரோஜன் சுரப்பதில் மாறுபாடு ஏற்பட்டது. அதேசமயம், நீரிழிவு மாத்திரைகள், ஈஸ்ரோஜன் சுரப்பை சரிசமமாக கட்டுப்படுத்தியது. இந்த ஆய்வு முடிவானது தென்கொரியாவில் இருந்து வெளியாகும் மருத்துவ இதழ் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...