|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

02 March, 2012

டைட்டானிக் 100-வது ஆண்டு நினைவு தினம்!


டைட்டானிக் கப்பல் இங்கிலாந்தில் உள்ள சவுத் ஆம்ப்டன் நகரில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு கடந்த 1912-ம் ஆண்டு ஏப்ரல் 10-ந்தேதி அட்லாண்டிக் பெருங்கடலில் தனது பயணத்தை தொடங்கியது. கடலில் மூழ்கியது பிரமாண்டமான அந்த அதி நவீன சொகுசு கப்பலில் 2200 பயணிகளும், ஊழியர்களும் இருந்தனர். 4 நாள் பயணத்துக்கு பின் அதாவது ஏப்ரல் 14-ந்தேதி இரவு 11.40 மணியளவில் இக்கப்பல் ஒரு ராட்சத பனிப்பாறையின் மீது மோதியது. இதனால் கப்பல் 2 துண்டுகளாக பிளந்து கடலில் மூழ்கியது. உடனே அதில் அவசர கால தேவைக்கு பயன்படுத்தப்படும் 20 சிறிய படகுகள் மற்றும் உயிர் காக்கும் கவச உடைகள் உதவியின் மூலம் பயணிகள் வெளியேற்றப்பட்டனர். இருந்தும் கப்பலில் இருந்த 705 பேரை மட்டுமே காப்பாற்ற முடிந்தது. 1,522 பேர் கடலில் மூழ்கி பலியாகினர். இச்சம்பவம் இன்னும் மறையாத அழிக்க முடியாத வடுவாக உள்ளது. இக்கப்பல் கடலில் மூழ்கி தற்போது 100 ஆண்டுகள் ஆகிறது. அது கடலில் மூழ்கிய நினைவு தினம் வருகிற ஏப்ரல் 15-ந்தேதி கடை பிடிக்கப்படுகிறது. அது குறித்த குறிப்புகள் வருகிற 15-ந்தேதி வெளியிடப்பட உள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...