|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

22 April, 2012

எய்ம்ஸ் மருத்துவமனையில் 3 ஆண்டுகளில் சிகிச்சையின்போது 11500 பேர் உயிரிழப்பு!


எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 3 ஆண்டுகளில் சிகிச்சையின்போது 11500 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்மூலம் இது தெரியவந்துள்ளது.மும்பையைச் சேர்ந்த அஜய் மராத்தீ என்பவர் கடந்த 3 ஆண்டுகளில் எய்ம்ஸ் மருத்துவமனையில் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேள்வி கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள மருத்துவமனை நிர்வாகத்தின் பேராசிரியர் சதாபதி மொத்தம் 11566 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவித்தார்.பெரும்பாலான இறப்புகள் அனைத்தும் உறுப்புகள் நன்கொடை கிடைக்காமல் நடந்த இறப்புகளாகும். ஒருவரின் உடலில் இருந்து 8 உறுப்புகளை தானமாக அளிக்கலாம். மக்கள் இதில் விழிப்புணர்ச்சி இல்லாமல் இருப்பது துரதிருஷ்டவசமானது என அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...