|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

22 April, 2012

எழுத்தாளர்களுக்கு பதிப்பாளர் சங்கம் தலா ரூ.1 லட்சம் பரிசு!


முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, தென்னிந்திய புத்தக விற்பனையாள் மற்றும் பதிப்பாளர் சங்கத்திற்கு ரூ.1 கோடி நன்கொடை வழங்கி அந்த தொகையை வங்கியில் டெபாசிட் செய்து அதில் இருந்து கிடைக்கும் வட்டித்தொகையை கொண்டு எழுத்தாளர்களுக்கு ஆண்டுதோறும் பரிசு வழங்குமாறு கூறி இருந்தார்.2012-ம் ஆண்டு பரிசுக்குரியவர்களை டாக்டர் இ.சுந்தரமூர்த்தி, பேராசிரியர் ராமகுருநாதன், பாலரமணி ஆகியோர் கொண்ட குழு தேர்வு செய்துள்ளது. பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் விவரம் வருமாறு:-

1. தமிழ் உரைநடை இலக்கியம் - மா.ர.போ.குருசாமி
2. தமிழ் கவிதை இலக்கியம் - சிற்பி பாலசுப்பிரமணியம்
3. தமிழ் நாடக இலக்கியம் - கே.பி.அறிவானந்தம்
4. தமிழ் புனைவு இலக்கியம் - விக்கிரமன்
5. ஆங்கில இலக்கிய எழுத்தாளர் - பிரேமா நந்தகுமார்
6. பிற இந்திய மொழி எழுத்தாளர் (கொங்கணி மொழி இலக்கியம்) - பிரான்சிஸ் டி-சவ்சா

மேற்கண்ட எழுத்தாளர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கத்துடன், வெள்ளிக்கேடயம், பொன்னாடை ஆகியவையும் வழங்கப்படும். பரிசளிப்புவிழா, உலகப் புத்தக திருநாளான நாளை (திங்கட்கிழமை) மாலை 6 மணிக்கு சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெறும்.விழாவுக்கு தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டியார் தலைமை தாங்குகிறார். பரிசுகளை தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் வழங்குகிறார்.
மேற்கண்ட தகவலை தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தலைவர் ஆர்.எஸ்.சண்முகம் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...