|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

18 April, 2012

இந்திய குழுவை ஏமாற்ற இலங்கையில் அவசர பணி!

இலங்கை சென்றுள்ள இந்திய எம்.பிக்கள் குழுவினர் இன்று அல்லது நாளை முல்லைத்தீவுக்கு செல்லவுள்ளனர்.   இதையடுத்து அங்கு பராமரிப்பு இன்று கிடக்கும் மாஞ்சோலை மருத்துவமனை மிக அவசரமாக சீரமைக்கப்பட்டு வருகிறது. மெயின் ரோட்டில் இருந்து மருத்துவமனைக்கு செல்லும் சாலையை புனரமைத்தல், மருத்து வம னையில் பெயர் பலகையை மாற்றுதல், விடுதி களுக்கு பெயர் மற்றும் இலக்கமிடுதல் போன்ற பணிகளில் ராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.கவனிப்பாரின்றி கிடக்கும்  மாஞ்சோலை மருத்துவமனை அனைத்து வசதிகளூடனும் இயங்குவதுபோல் காட்டி இந்திய குழுவை ஏமாற்ற இப்பணிகள் நடைபெற்று வருவதாக அங்குள்ள தமிழர்கள் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...