|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

18 April, 2012

எந்தக் கட்சியும் தங்களுக்கு இந்த சின்னம்தான் ஒதுக்க வேண்டும் என்று உரிமை கோர முடியாது!

எந்தக் கட்சியும் தங்களுக்கு இந்த சின்னம்தான் ஒதுக்க வேண்டும் என்று உரிமை கோர முடியாது. இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் மிகவும் சரியாக உள்ளது என்று கூறிய உச்சநீதிமன்றம் தங்களுக்கு முரசு சின்னம் ஒதுக்கக் கோரி தாக்கல்செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்து விட்டது.தேமுதிக மட்டுமல்லாமல், விடுதலைச் சிறுத்தைகள், கொங்கு நாடு முன்னேற்றக் கழகம், மனித நேய மக்கள் கட்சி, அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட 15 கட்சிகள் தாக்கல் செய்திருந்த மொத்த மனுக்களையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. இதனால் இந்தக் கட்சிகளுக்கு எதிர்காலத்தில் சின்னம் தொடர்பாக பெரும் நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது.

கடந்த சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக இந்தக் கட்சிகள் தங்களுக்கு இந்தந்த சின்னம்தான் ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தை அணுகியிருந்தன. இதையடுத்து தேமுதிக, விடுதலைச் சிறுத்தைகள், என்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகளுக்கு மட்டும் இடைக்காலமாக இவர்கள் கேட்ட சின்னங்களை ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.தேமுதிக கட்சி சார்பில் முரசு சின்னம் கேட்டிருந்தனர். அது ஒதுக்கப்பட்டது. தேர்தலில் அக்கட்சி வேட்பாளர்கள் அனைவரும் முரசு சின்னத்திலேயே போட்டியிட்டனர். இந்த நிலையில் தற்போது இந்த வழக்கில் 3 பேர் கொண்ட உச்சநீதிமன்ற பெஞ்ச் தீர்ப்பளித்துள்ளது.

3 நீதிபதிகளில் 2 பேர் தேர்தல் ஆணையத்திற்கு சாதகமாக தீர்ப்பு வழங்கி அத்தனை மனுக்களையும் டிஸ்மிஸ் செய்வதாக அறிவித்தனர். நீதிபதிகள் தீர்ப்பை அறிவித்து கூறுகையில், தேர்தல் சின்னங்களை ஒதுக்க தேர்தல் ஆணையம் வகுத்துள்ள விதிமுறைகள் சரியானவையே. கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்குவதை தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்ய வேண்டும். இதில் யாரும் உரிமை கோர முடியாது என்று கூறி மனுக்களை டிஸ்மிஸ் செய்தனர்.சட்டசபைத் தேர்தலில் தற்காலிகமாக முரசு சின்னத்தைப் பெற்றது தேமுதிக. இருப்பினும் தேர்தலில் நிறைய இடங்களில் வென்றதன் மூலம், தேர்தல் ஆணைய விதிமுறைகளின்பபடி அக்கட்சிக்கே முரசு சின்னம் ஒதுக்கபப்ட்டது. இருப்பினும் தொடர்ந்து அது தனது வாக்கு சதவீதத்தை தக்க வைக்க வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் சின்னம் நிரந்தரமாகாது, கை நழுவிப் போய் விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...