|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

18 April, 2012

இனப் பிரச்னைக்கு தீர்வு காணாமல் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிப்பதில் பயன் இல்லை!

இலங்கையில் இனப் பிரச்னைக்கான அரசியல் தீர்வை ஒதுக்கிவைத்துவிட்டு, வளர்ச்சித் திட்டங்களுக்கு மட்டும் முன்னுரிமை அளிப்பதால் எந்தவித பயனும் ஏற்படப்போவதில்லை. தமிழ்மக்களின் பிரச்னைகளுக்கு உடனடியாகத் தீர்வைக் காண முன்வரவேண்டும் என்று இந்திய எம்.பி.க்கள் குழுவுக்கு தலைமைதாங்கி இலங்கை வந்துள்ள சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.கூட்டு அரசினால் தன்னிச்சையாக செயல்பட முடியாது என்றோ, பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாகவோ காரணங்களை கூறி அரசியல் தீர்வை தாமதிப்பதை இந்தியா ஒருபோதும் விரும்பவில்லை. கடந்த மூன்று ஆண்டுகள் அரசியல் தீர்வுக்கு சிறந்த சூழலாக அமைந்திருந்தன. எனினும் அந்த வாய்ப்பை இலங்கை சரியாக பயன்படுத்திக் கொள்ளாதது பெரும் துரதிருஷ்டவசமானது என்று அவர் தெரிவித்தார்.இலங்கையின் தற்போதைய சூழல் மற்றும் இனப் பிரச்னைக்கான தீர்வு முயற்சிகள் தொடர்பாக இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், இலங்கைத் தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற கலந்துரையாடலில் பேசிய சுஷ்மா சுவராஜ்,இலங்கையில் நீண்டகாலமாகக் காணப்படும் இனப் பிரச்சினைக்குத் தீர்வுகாணப்பட வேண்டும். வளர்ச்சிப் பணிகள் முக்கியத்துவம் வாய்ந்தவைதான் என்றாலும் அரசியல் தீர்வு விஷயம் இன்றியமையாத ஒன்றாகும். எனவே அரசியல் தீர்வும் வளர்ச்சிப் பணிகளும் சம அளவில் இருக்க வேண்டும் என சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...