|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

10 March, 2011

அமெரிக்காவில் இந்து சாமியாருக்கு 14 ஆண்டு சிறை

அமெரிக்காவில் செக்ஸ் புகார் கூறப்பட்ட இந்து சாமியாருக்கு 14 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் நகரைச் சேர்ந்தவர் பிரகாஷ் ஆனந்த் சரஸ்வதி (82). இந்துமத சாமியாரான இவர் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தென்மேற்கு ஆஸ்டின் நகரில் 200 ஏக்கரில் ஆசிரமம் நடத்தி வருகிறார். இவரை சுவாமிஜி என்று பக்தர்கள் அன்புடன் அழைக்கின்றனர். இவர் மீது 2 பெண்கள் செக்ஸ் புகார் கூறி இருந்தனர். அவர்கள் இருவரும் ஆசிரமத்தில் வளர்ந்தவர்கள். டீன்ஏஜ் பருவத்தில் இருந்தபோது, அதாவது கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சாமியார் பிரகாஷ் ஆனந்த் சரஸ்வதி இவர்களுடன் செக்ஸ் உறவில் ஈடுபட்டதாக புகார் செய்தனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை ஹுஸ்டன் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சார்லஸ் ராம்சே குற்றம் சாட்டப்பட்ட பிரகாஷ் ஆனந்த் சரஸ்வதி சுவாமிக்கு 14 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும், ரூ.90 லட்சம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...