|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

10 March, 2011

புலிகள் முகாம்கள் இலங்கையின் தவறான தகவல் இந்தியா மறுப்பு

தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம்கள் செயல்படுவதாக வெளியான தகவல் தவறானது. ஆதாரமற்ற இது போன்ற தகவல்களை தெரிவிப்பதை இலங்கை அரசு தவிர்க்க வேண்டும்' என, இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.இந்திய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் கூறியதாவது: தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம்கள் மூன்று இடங்களில் செயல்பட்டு வருவதாக, இலங்கை பிரதமர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இலங்கை அரசு தெரிவித்துள்ளது போல், தமிழகத்தில் பயிற்சி முகாம்கள் எதுவும் செயல்படவில்லை. இலங்கை அரசு தெரிவித்துள்ள தகவலை உறுதியாக மறுக்கிறோம். இது தொடர்பான தகவல் எதையும், இந்தியாவுடன், இலங்கை பகிர்ந்து கொள்ளவில்லை. எனவே, யூகத்தின் அடிப்படையிலான, ஆதாரமற்ற இது போன்ற தகவல்களை தெரிவிப்பதை, இலங்கை அரசு தவிர்க்க வேண்டும். இவ்வாறு வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் கூறினார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...