|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

10 March, 2011

ஸ்லம்டாக் ரூபினாவுக்கு உதவிய தயாநிதி அழகிரி

சமீபத்தில் மும்பையில் பந்த்ரா பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் அங்குள்ள நூற்றுக்கணக்கான குடிசைகள் தீயில் எரிந்து நாசமாகின. அதில் ஸ்லம்டாக் மில்லினர் படத்தில் நடித்த சிறுமி ரூபினா அலியின் வீடும் தீ விபத்தில் சிக்கியது. இதில் ஆஸ்கர் நிகழ்ச்சியின் போது அவர் அணிந்திருந்த உடை, அங்கு எடுக்கப்பட்ட புகைப்படம் உள்ளிட்ட அனைத்தும் தீயில் எரிந்து நாசமாகின.
இதனிடையே டைரக்டர் க்ரிஷ் இயக்கத்தில், சிம்பு நடிக்கும் "வானம்" படத்தின் சூட்டிங் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தின் பாடல் காட்சிக்காக மும்பையில் ரூ.1கோடி செலவில் பிரம்மாண்ட செட் போட் சூட்டிங் நடைபெற்று வந்தது. இப்படத்தை தயாநிதி அழகிரியின் கிளவுட் நைன் மூவிஸ் வாங்கியிருக்கிறது. இந்நிலையில் பந்த்ரா குடிசை தீ விபத்தில் சிறுமி ரூபினா அலியின் வீடு பறிபோனதை அறிந்த துரை தயாரநிதி அழகிரி, அவரை தேடி கண்டுபிடித்து வானம் படத்தின் ஆடியோ உரிமைபெற்ற வீனஸ் ஆடியோவுக்கு வரவழைத்தார். பின்னர் ரூபினா அலிக்கு ரூ.50ஆயிரம் ரொக்கபணத்தை கொடுக்க ஏற்பாடு செய்தார். இதனை நடிகர் சிம்பு, ரூபினாவிடம் கொடுத்தார். அதேபோல் வீனஸ் ஆடியோ கம்பெனி டைரக்டர் சம்பக்கும் தன் பங்கிற்கு ரூ.21 ஆயிரம் நிதியுதவி செய்தா

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...