|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

21 March, 2011

கச்சத்தீவு அந்தோணியார் ஆலய விழா


As many as 2066 Indian pilgrims, mostly from Rameswaram island, began their journey to Katchatheevu in Sri Lanka on Saturday for attending the festival at St. Antony's Church. The group included 426 women and 204 children. Before embarking on boats, they were frisked by police, Customs, Revenue officials, Coastal Security Group and others. All pilgrims were given identity cards. Lifejackets were distributed by the State government.


கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய விழா, இந்திய - இலங்கை பக்தர்களின் கூட்டு பிரார்த்தனையுடன் சிறப்பாக முடிந்தது. தமிழகத்திலிருந்து சென்றவர்கள் அனைவரும் நேற்று மாலை, ராமேஸ்வரம் திரும்பினர்.
இலங்கை கச்சத்தீவு அந்தோணியார் ஆலய விழாவை, கடந்த 16ம் தேதி நெடுந்தீவு பாதிரியார் அமல்ராஜ் கொடியேற்றி, துவக்கி வைத்தார். இதில், பங்கேற்க, தமிழகத்தின் பல மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள், ராமேஸ்வரத்திலிருந்து நேற்று முன்தினம் படகில் சென்றனர். நடுக்கடலில் இந்திய - இலங்கை கடற்படை அதிகாரிகளின் சோதனைக்குப்பின், கச்சத்தீவில் அனுமதிக்கப்பட்டனர். இலங்கையிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.

தீவின் அடர்ந்த காடு, கடற்கரையில் கூடாரம் அமைத்தும், வெட்டவெளியில் தங்கியும் பக்தர்கள், நேற்று காலை ஆறு மணிக்கு நடந்த சிறப்பு திருப்பலியில் கலந்து கொண்டனர். அப்போது, இந்திய - இலங்கை ஒற்றுமை, உலக அமைதி, சுனாமியில் பாதித்த ஜப்பான் நாட்டிற்காக மெழுகுவத்தி ஏற்றி, கூட்டு பிரார்த்தனை செய்தனர். ஒன்பது மணிக்கு நடந்த அந்தோணியார் தேர்பவனியை தொடர்ந்து, அங்கிருந்து புறப்பட்ட பக்தர்கள், மாலையில் ராமேஸ்வரம் வந்தனர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...