|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

21 March, 2011

இந்தியாவில் பெருமளவில் ஊழல் - ஆய்வில் தகவல்

இந்தியாவில் பெருமளவில் ஊழல்கள் நடந்துள்ளதாக சர்வதேச ஆய்வு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் கடந்த சில மாதங்களாக காமன்வெல்த் விளையாட்டு ஊழல், ஆதர்ஸ் வீட்டு வசதி ஊழல், 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் ஆகிய மெகா ஊழல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. மத்திய அரசு இந்த ஊழல் புகார்களால் எதிர்க்கட்சியினர் மற்றும் பொதுமக்களது கண்டனங்களை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது. 
இந்த நிலையில் சர்வதேச ஆலோசனை மற்றும் ஆய்வு நிறுவனமான ஏ.பி.என்.ஜி. 100 உள்நாட்டு, வெளிநாட்டு வர்த்தக நிறுவனங்கள் குறித்த ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்வு குறித்து கே.பி.எம்.ஜி. நிறுவனம் தெரிவித்ததாவது,
கடந்த சில மாதங்களாக வெளிச்சத்துக்கு வந்துள்ள பல ஊழல்கள் பிரதமர் மன்மோகன்சிங்கின் நிர்வாகத்தில் உள்ள குறைகளை சுட்டிக் காட்டுகிறது. பிரதமர் கூட்டணி தர்மத்துக்காகவும், கூட்டணி அரசை தக்க ைவத்துக் கொள்ளவும் உரிய நடவடிக்கை எடுக்க முடியாத நிலையில் உள்ளதாக தெரிகிறது. தற்போது இந்தியாவில் மக்கள் பாஸ்போர்ட் பெறுவது, உரிமங்கள் பெறுவது போன்றவற்றுக்காக சிறிய அளவில் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து காரியத்தை சாதகமாக முடித்துக் கொள்கின்றனர். இது மட்டுமின்றி பல்லாயிரக்கணக்கான கோடிகளிலும் மெகா ஊழல்கள் நடைபெறுகின்றன. இது அரசியல்வாதிகளுக்கும் தொழில் அதிபர்களுக்கும் உள்ள சட்டத்திற்கு புறம்பான தொடர்பை அம்பலப்படுத்தி உள்ளது. இந்த மெகா ஊழல்கள் தடுக்கப்படாவிட்டால் நாட்டிற்கு பாதகமான விளைவுகள் ஏற்படும். மத்திய அரசு வரும் நிதியாண்டில் இந்தியாவில் 9 சதவீத வளர்ச்சி ஏற்படும் என்று தெரிவித்துள்ளது. ஆனால் பெருகி வரும் ஊழல்களால் அன்னிய முதலீடுகள் வெகுவாக குறைந்தால் 9 சதவீத வளர்ச்சியை எட்ட முடியுமா? என்பது சந்தேகம்தான். இதனால் அரசியல் மற்றும் பொருளாதார சூழலில் பெரும் பின்னடைவுகள் ஏற்படும். இந்தியாவில் நடக்கும் பெருமளவிலான ஊழல்கள் கட்டுமானத் துறையிலும் தொலைத் தொடர்பு துறைகளிலும்தான் நடைபெற்றுள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...