|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

21 March, 2011

பட்டைய கிளப்பும் தலைவர் படங்கள்



சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால் அரசியல் மேடைகளில் எம்.ஜி.ஆர். பெயர் பலமாக ஒலிக்கத் துவங்கியுள்ளது. இன்னொரு புறம் தியேட்டர்காரர்களும் அவருடைய படங்களை ரிலீஸ் செய்து வசூல் குவிக்கின்றனர்.

கிராம புறங்களில் எம்.ஜி. ஆர், படங்கள் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களில் படம் பார்க்க வருகிறவர்களுக்கு பிரியாணி, இலவச வேட்டி, சேலைகளை சிலர் வழங்கியுள்ளனர்.

இது தேர்தல் அதிகாரிகள் கவனத்துக்கு செல்ல அவர்கள் விரைந்து போய் தடுத்துள்ளனர். சென்னையில் பல்லாவரத்தில் உள்ள லட்சுமி தியேட்டரில் தினசரி 4 காட்சிகளாக நினைத்ததை முடிப்பவன் படம் திரையிடப்பட்டுள்ளது. எம்.ஜி. ஆர். ரசிகர்கள் கூட்டம் கூட்டமாய் திரண்டு வந்து படம் பார்க்கின்றனர். கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும், பூ மழை தூவி வசந்தங்கள் வாழ்த்த, “ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து போன்ற பாடல்களுக்கு ரசிகர்கள் பூக்களை தூவி ஆரவாரம் செய்கின்றனர். விசில் சத்தம் ஒலிக்கிறது. தியேட்டர் முன் எம்.ஜி.ஆர். கட்-அவுட்களும் வைக்கப்பட்டு உள்ளது.

நாடோடி மன்னன் படம் பாரத், கோயம்பேடு ரோகினி, சைதாப்பேட்டை ராஜ், திருவள்ளுர் ஸ்ரீகிருஷ்ணா தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது.

புதுப்படங்களை மிஞ்சும் அளவுக்கு எம்.ஜி.ஆர். படங்கள் வசூல் குவிப்பதாக விநியோகஸ்தர்கள் கூறினர். 1960 மற்றும் 70களில் வந்த எம்.ஜி.ஆர் படங்கள் இப்போதும் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடுவதும், வசூல் குவிப்பதும் திரைத் துறையினரை ஆச்சரியப்படுத்தி உள்ளது.

ஆயிரத்தில் ஒருவன், எங்கள் வீட்டு பிள்ளை, உலகம் சுற்றும் வாலிபன் போன்ற படங்களும் மீண்டும் ரிலீஸ் ஆக உள்ளன.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...