|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

21 March, 2011

Coalition targets Gadhafi compound

அமெரிக்க கூட்டுப்படைகள் நேற்று அதிகாலையிலேயே ராணுவ தாக்குதலை துவங்கின. பிரான்சின் போர் விமானங்கள் பெங்காசி நகரின் முக்கிய ராணுவ நிலையங்களை குண்டு வீசித் தாக்கின. அமெரிக்க கூட்டுப் படைகள் ட்ரிபோலி, மிஸ்ரதா நகரில் கடாபியின் ராணுவ நிலைகளின் மீது ஏவுகணைகள் வீசின. இந்த தாக்குதலில் போர் விமானங்கள், ராணுவடாங்கிகள் தீப்பிடித்தன.

இந்த ஏவுகணை தாக்குதலில் இதுவரை 65 பேர் பலியாகியுள்ளனர், 150 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ஆனாலும் ட்ரிபோலி, சிர்தே, ஜீவாரஹ் உள்ளிட்ட நகரங்களில் தொடர் தாக்குதல் நடந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையே நேற்று இரவு அமெரிக்க கூட்டுப்படை ட்ரிபோலியில் உள்ள அதிபர் கடாபியின் 4 அடுக்கு மாளிகையை குறி வைத்து ஏவுகணைகள் வீசின. இதில் மாளிகை தரைமட்டமானது.

இந்த மாளிகை தான் கடாபியின் அதிகார மையமாகவும், ஆலோசனைக் கூடமாகவும் இருந்து வந்தது. அமெரிக்க தாக்குதலில் இருந்து கடாபியின் ஆதரவாளர்கள் பலர் மனிதக் கேடயமாக இருந்து அவரை காப்பாற்றி வருகின்றனர். இந்த ஏவுகணை தாக்குதலில் அவர்களில் பலர் இறந்திருக்கக்கூடும் என்று தெரிகிறது. ஆனால் எண்ணிக்கை தெரியவில்லை. 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...